ADDED : அக் 26, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: பாசாரில் காணாமல் போன தாயை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மனைவி லட்சுமி, 67; கணவன், மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துச் சென்ற லட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மகள் சரளா அளித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.