/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி
/
தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி
தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி
தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி
ADDED : டிச 09, 2024 07:48 AM

கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் நிலை குறித்து கள்ளக்குறிச்சி எம்.பி., கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி எம்.பி., மலையரசன் லோக்பசாவில் கேள்வி எழுப்பி பேசியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள், நிலுவையில் உள்ள திட்ட பணிகள், ஒவ்வொரு திட்டத்திற்கான மொத்த நீளம், செலவுகள் உள்ளிட்ட விபரங்களை வெளியிட வேண்டும்.
மேலும், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் விபரங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என பேசினார்.