sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சின்னசேலம் பி.டி.ஓ.,வை தாக்கியஊராட்சி செயலாளர் 'சஸ்பெண்ட்'

/

சின்னசேலம் பி.டி.ஓ.,வை தாக்கியஊராட்சி செயலாளர் 'சஸ்பெண்ட்'

சின்னசேலம் பி.டி.ஓ.,வை தாக்கியஊராட்சி செயலாளர் 'சஸ்பெண்ட்'

சின்னசேலம் பி.டி.ஓ.,வை தாக்கியஊராட்சி செயலாளர் 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 01, 2024 06:29 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வை தாக்கிய ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து, வட்டார ஊராட்சி பி.டி.ஓ., உத்தரவிட்டார்.

சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிபவர் கண்ணுசாமி மகன் ஜெகநாதன்,56; வருகிற லோக்சபா தேர்தலையொட்டி, சின்னசேலம் ஒன்றியத்தில் பணிபுரியும் சில ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்கான பட்டியலை ஜெகநாதன் தயார் செய்துள்ளார்.

அதில், தொட்டியம் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் துரை என்பவரை வி.பி.அகரம் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஊராட்சி செயலாளர் துரை, நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த பி.டி.ஓ., ஜெகநாதனை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

உடன் மயக்கமடைந்த பி.டி.ஓ., ஜெகநாதனை அலுவலகத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து பி.டி.ஓ., ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில், ஊராட்சி செயலாளர் துரை மீது 3 பிரிவுகளின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

மேலும், அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து பணியில் இருந்த பி.டி.ஓ., வை தாக்கியதற்காக, ஊராட்சி செயலாளர் துரையை சஸ்பெண்ட் செய்து, சின்னசேலம் வட்டார வளர்ச்சி பி.டி.ஓ., ரவிசங்கர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us