/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு தேசிய அட்டை
/
மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு தேசிய அட்டை
ADDED : நவ 23, 2024 06:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 210 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமில் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டு அடையாள அட்டை பெறாத சங்கராபுரம் பகுதி மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர்.
முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.
அரசு எலும்பு முறிவு மருத்துவர் பாலசுப்ரமணியன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் கணேஷ்ராஜா, வாசவி, மனநல மருத்துவர் உஷாநந்தினி, கண் மருத்துவர் லோகநாயகி ஆகிய மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.
முகாமில், கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர், பொது மாற்றுத்திறனாளிகள் 110 பேர் என மொத்தம் 210 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.