sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் பணிகள்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு

/

கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் பணிகள்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் பணிகள்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் பணிகள்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு


ADDED : ஜூன் 29, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய புறநகர் பஸ்நிலையம் உட்பட ரூ.46.30 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர்கள் வேலு, ராஜேந்திரன் துவக்கி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் கிராம எல்லையில் புதிய புறநகர் பஸ் நிலையம், குடிநீர் அபிவிருத்தி பணிகள் மற்றும் தினசரி நாளங்காடி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.

நகர சேர்மன் சுப்ராயலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பங்கேற்று, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.21 கோடி மதிப்பில் புறநகர் பஸ்நிலையம்;

ரூ.21 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணிகள்; ரூ.9.09 கோடி மதிப்பில் தினசரி நாளங்காடி; என மொத்தம்,

ரூ.46.30 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ஜீவா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், துணை சேர்மன் தங்கம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கட்ரமணன், நகராட்சி ஆணையர்கள் சரவணன், புஸ்ரா, பொறியாளர் பிரபாகரன், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், முருகன், கொளஞ்சிவேலு, மோகன், ராஜேந்திரன், ஜெயராமன், சுமதி, சவரிராஜ், துரைமுருகன், ஜெகநாதன், அய்யப்பன், ராதாகிருஷ்ணன், நடராஜன், செல்வகணேஷ், செந்தில்முருகன், நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நகர சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன்கள் ஷமீம்பானு அப்துல்ரசாக், வைத்தியநாதன், ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, தாமோதரன், வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், அஞ்சலாட்சி அரசகுமார், ராஜவேல், சாந்தி இளங்கோவன், திலகவதி நாகராஜன், துணை சேர்மன்கள் விமலா முருகன், அன்புமணிமாறன், நெடுஞ்செழியன், சென்னம்மாள் அண்ணாதுரை, தனம் சக்திவேல், அலெக்சாண்டர், ராமலிங்கம், அஞ்சலை கோவிந்தராஜ், பேரூராட்சி சேர்மன்கள் வீராசாமி, ரேவதி ஜெய்கணேஷ், துணை சேர்மன் சங்கர், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை கலந்து கொண்டனர்.

தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், கனகராஜ், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், வசந்தவேல், முருகன், ராமலிங்கம், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண்ராஜ், துணை அமைப்பாளர் உதயா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us