
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் புரட்டாசி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு நிகும்பலா யாகம் நேற்று இரவு நடந்தது.
இதையொட்டி, பத்ரகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை, ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பத்ரகாளி கவசம் பாடி, மிளகாய் வற்றல் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாகம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.