நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே மாயமான செவிலியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த க.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் காவியா, 18; செவிலியர். கச்சிராயபாளையம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வேலைக்கு சென்ற காவியா மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து காவியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

