ADDED : பிப் 06, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பழைய உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி, 75; கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த வையாபுரி நேற்று முன்தினம் விஷம் குடித்தார். உடன், அவரது குடும்பத்தினர் வையாபுரியை மீட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே வையாபுரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

