ADDED : நவ 05, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; இவர் நேற்று காலை 7:௦௦ மணியளவில் தனது பைக்கில் அம்மையகரம் கூட்ரோடு அருகே உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது திருப்பூர் மாவட்டம், அனுப்பூர்பாளையம் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் மகன் மாயாண்டி, 48; , என்பவர் ஓட்டி வந்த கார் சுப்பிரமணி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

