ADDED : ஏப் 27, 2025 05:30 AM
அ நிறம் | அளவு
சின்னசேலம் : சின்னசேலம் அருகே வாகனம் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் ஓட்டல் அருகே நேற்று முன்தினம் காலை 6:00 மணி அளவில் அடையாளம் தெரியாத, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
சின்னசேலம் போலீசார் அங்கு சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது.
அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
