ADDED : ஜன 16, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : ஏமப்பேர் பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிகாமணி மகன் மூவேந்தன்,38; இவர் ஏமப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே கடந்த 13ம் தேதி இரவு இறந்த கிடந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் மூவேந்தனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.