/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நெல் அறுவடை இயந்திர டிரைவர் தற்கொலை
/
நெல் அறுவடை இயந்திர டிரைவர் தற்கொலை
ADDED : பிப் 26, 2024 06:24 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே விஷம் குடித்த நெல் அறுவடை இயந்திர டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன், 29; நெல் அறுவடை இயந்திர டிரைவர். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டுள்ளது.
இதனால் தலை மற்றும் கழுத்தில் அடிக்கடி வலி இருந்து வந்தது.
இதனால், மனமுடைந்த பிரபாகரன், கடந்த 21ம் தேதி வீட்டில் பருத்திக்கு அடிக்கும் மருந்தினை எடுத்து குடித்தார்.
உடன், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

