sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பனையேறி பாதுகாப்பு இயக்கம் மனு

/

போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பனையேறி பாதுகாப்பு இயக்கம் மனு

போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பனையேறி பாதுகாப்பு இயக்கம் மனு

போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பனையேறி பாதுகாப்பு இயக்கம் மனு


ADDED : ஆக 20, 2025 07:34 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பனை, தென்னைக்கு படையலிட்டு சுவாமி வழிபாடு செய்த பெண்களை எட்டி உதைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைமணி தலைமையிலான நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

சின்னசேலம் பகுதிகளில் கடந்த 4 தலைமுறைக்கு மேலாக 40 குடும்பத்தினர் பனை தொழில் செய்கிறோம். கடந்த 17ம் தேதி குலதெய்வ வழிபாடுகளில் ஒன்றான பனை மற்றும் தென்னைக்கு பூசை மற்றும் படையலிட்டு வழிபாடு செய்தோம். அப்போது, அங்கு வந்த கச்சிராயபாளையம் போலீசார் எங்களது தெய்வ நம்பிக்கை சார்ந்த வழிபாட்டிற்கு இடையூறு செய்யும் வகையிலும், மத சடங்குகளை இழிவுபடுத்தும் விதமாகவும் மிரட்டி பேசினர்.

மேலும், வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களுடன் ஆண் போலீசார் தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டு, இரண்டு பெண்களை எட்டி உதைத்தனர்.

படையலில் ஈடுபட்டவர்கள் மட்டுமில்லாமல், வேடிக்கை பார்த்த நபர்கள் மீதும் வழக்கு பதிந்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

எனவே, குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us