/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஞ்சமுகி வராஹிக்கு பஞ்சமி வழிபாடு
/
பஞ்சமுகி வராஹிக்கு பஞ்சமி வழிபாடு
ADDED : நவ 10, 2025 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை நேற்று நடந்தது.
அம்மனுக்கு பட்டு சார்த்தி, தங்க கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பெண்கள் பச்சை விரலி மஞ்சளை அரைத்து ஜல வாராஹி அம்மனுக்கு சார்த்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்றும், நாளையும் பஞ்சமி திதியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

