sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி தலைவர்கள் அரை நிர்வாண போராட்டம்

/

ஊராட்சி தலைவர்கள் அரை நிர்வாண போராட்டம்

ஊராட்சி தலைவர்கள் அரை நிர்வாண போராட்டம்

ஊராட்சி தலைவர்கள் அரை நிர்வாண போராட்டம்


ADDED : செப் 25, 2024 10:13 PM

Google News

ADDED : செப் 25, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் பணி ஆணை வழங்க கோரி ஊராட்சி தலைவர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி ஆணை, ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த பணி ஆணையை வழங்க வலியுறுத்தி 30 ஊராட்சி தலைவர்கள் நேற்று காலை 11:30 மணியளவில் திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் ஊராட்சி தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. பின்னர் பி.டி.ஓ., செல்வபோதகர் பணி ஆணை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து நேற்று மதியம் 3:00 மணியளவில் ஊராட்சி தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us