sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொர்க்கவாசல் திறக்க  ஊராட்சி தலைவர் மனு

/

சொர்க்கவாசல் திறக்க  ஊராட்சி தலைவர் மனு

சொர்க்கவாசல் திறக்க  ஊராட்சி தலைவர் மனு

சொர்க்கவாசல் திறக்க  ஊராட்சி தலைவர் மனு


ADDED : ஜன 07, 2025 12:06 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சித் தலைவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவரங்கம் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் லஷ்மிகுமார் ஆகியோர் கலெக்டர் பிரசாந்தை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: திருவரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறப்பது வழக்கம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், சொர்க்கவாசல் வழியாக சுவாமியை தரிசனம் செய்வர்.

இந்நிலையில், கோவில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் நடப்பாண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்யாமல், கோவில் நிர்வாகத்தினர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு கோவில் திருப்பணி வேலைகள் நடந்தபோது சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைவர். எனவே, நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us