sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு துவக்கப் பள்ளி முன் பெற்றோர்கள் முற்றுகை 

/

அரசு துவக்கப் பள்ளி முன் பெற்றோர்கள் முற்றுகை 

அரசு துவக்கப் பள்ளி முன் பெற்றோர்கள் முற்றுகை 

அரசு துவக்கப் பள்ளி முன் பெற்றோர்கள் முற்றுகை 


ADDED : பிப் 21, 2025 04:57 AM

Google News

ADDED : பிப் 21, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கூத்தக்குடி அரசு துவக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்துவதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாழடைந்த பள்ளியின் வகுப்பறை கட்டடம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் 2 மற்றும் 3ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வெளியே மரத்தடியில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.

இதனையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று மதியம் 12:00 மணியளவில் பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேரில் சென்று, விசாரணை நடத்தி, அங்கு வந்த சி.இ.ஓ., கார்த்திகாவிடம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில் தற்காலிகமாக ெஷட் அமைத்து தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us