sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பயணியர் நிழற்குடை கட்டடம் : அலுவலர்கள் ஆய்வு

/

பயணியர் நிழற்குடை கட்டடம் : அலுவலர்கள் ஆய்வு

பயணியர் நிழற்குடை கட்டடம் : அலுவலர்கள் ஆய்வு

பயணியர் நிழற்குடை கட்டடம் : அலுவலர்கள் ஆய்வு


ADDED : ஏப் 03, 2025 04:22 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் பயணியர் நிழற்குடை கட்டடத்தை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாணாபுரம் பஸ் நிறுத்தத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கட்டடத்தின் மேற்பகுதியில் கான்கிரீட் போடப்பட்டது. இந்நிலையில், பொறியாளரிடம் அனுமதி பெறாமல் கான்கிரீட் உறுதியாகும் முன்னரே கட்டுமான பணியாளர்கள் கடந்த மார்ச்., 25ம் தேதி சென்ட்ரிங் பலகைகளை அகற்றினர். அப்போது, கட்டடத்தின் அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்தது.

இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி ஆகியோர் பயணியர் நிழற்குடை கட்டடத்தை பார்வையிட்டு, அதன் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து கட்டுமான பணியை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். அப்போது, பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், பொறியாளர் வேல்முருகன், ஜெயபிரகாஷ், முத்துராமன், துணை பி.டி.ஓ., தினகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us