/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
/
உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
ADDED : அக் 19, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ நிறைவு விழா நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு நித்திய கால பூஜை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளிச பெருமாள், புஷ்பவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் யாகசாலையில் எழுந்தருளினர்.
மதியம் 10:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு பவித்திர மாலைகள் சாத்தப்பட்டு பட்டாச்சாரியார்களால் சுதர்சன ஹோமம், மகா பூர்ணகுதி நடந்தது. தொடர்ந்து சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

