/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மயில் வேட்டையாடிய சகோதரர்கள் கைது
/
மயில் வேட்டையாடிய சகோதரர்கள் கைது
ADDED : அக் 14, 2024 09:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே மயிலை வேட்டையாடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார், வரகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அம்பு மூலம் வேட்டையாடப்பட்ட பெண் மயிலை சாக்கு பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் மகன்கள் இருதயராஜ், 35; சூசைராஜ், 30; என தெரியவந்தது.
உடன், இருவரையும் கைது செய்து, இறந்த நிலையில் மயில் மற்றும் பைக், அம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.