sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தியாகதுருகம் நகரில் போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத போலீசாரால் மக்கள் அவதி

/

தியாகதுருகம் நகரில் போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத போலீசாரால் மக்கள் அவதி

தியாகதுருகம் நகரில் போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத போலீசாரால் மக்கள் அவதி

தியாகதுருகம் நகரில் போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத போலீசாரால் மக்கள் அவதி


ADDED : செப் 17, 2025 11:38 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் நகரில் தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசல்களை போலீசார் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தியாகதுருகம் நகரின் வழியே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அகலம் குறைவான இச்சாலையில் இருபுறமும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பொருட்களை வாங்க வருபவர்கள் கடைக்கு முன்பு பைக்குகளை நிறுத்துவதால் பாதசாரி கள் நடந்து செல்ல முடிவதில்லை. மாலையில் பள்ளி வாகனங்களில் வரும் மாணவர்கள் சாலையில் இருந்து இறங்கி செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி இருப்பதால் அச்சத்துடன் செல்லுகின்றனர்.

அத்துமீறும் ஆட்டோக்கள் எங்கு வேண்டுமானாலும் பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்களும் நீண்ட நேரம் சாலையில் நிறுத்திவிட்டு பொருட்களை இறக்குவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. இதனை ஒழுங்குபடுத்த போலீசார் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், சனிக்கிழமைகளில் மட்டும் வார சந்தைக்கு வரும் வாகன ஓட்டிகளிடம் வசூல் பணிக்கு சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுகின்றனர். மற்ற நாட்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் கவனம் செலுத்துவதில்லை.

இதனை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் நாளுக்கு நாள் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி வாகனங்கள் அதிகம் செல்வதால் நகரின் வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

தியாகதுருகம் நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை கண்டு கொள்ளாமல் போலீசார் மெத்தனமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை மீறும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.






      Dinamalar
      Follow us