sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்திற்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

/

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்திற்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்திற்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்திற்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 20, 2025 09:53 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய வரும் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்கவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் உத்தரவுக்கிணங்க, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யும் வகையில் வரும் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நியமன பதவிகளுக்கு பெண் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கட்ரமணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், தொடர்புடைய துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தினர், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us