/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இலவச வீட்டுமனைக்கு இடம் அளவீடு செய்து வழங்க மனு
/
இலவச வீட்டுமனைக்கு இடம் அளவீடு செய்து வழங்க மனு
ADDED : மார் 15, 2024 11:23 PM

கள்ளக்குறிச்சி: பிரதிவிமங்கலம் காலனியில் இலவச வீட்டுமனைக்கு இடம் அளவீடு செய்து வழங்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனு விபரம்
பிரதிவிமங்கலம் காலனியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கடந்த 2001ம் ஆண்டு 137 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை பட்டாவிற்கான இடம் அளவீடு செய்யாமல் இருந்தது.
கடந்த ஓராண்டாக தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் கடந்த 7ம் தேதி 80 பட்டாக்கள் அளவீடு செய்யப்பட்டது.
மீதமுள்ள பட்டாக்கள் அளவீடு செய்ய சிலர் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே உரிய விசாரணை செய்து வீட்டு மனை அளவீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

