sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: கள்ளக்குறிச்சியில் 203 பேர் கைது

/

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: கள்ளக்குறிச்சியில் 203 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: கள்ளக்குறிச்சியில் 203 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: கள்ளக்குறிச்சியில் 203 பேர் கைது


ADDED : ஜன 31, 2024 02:19 AM

Google News

ADDED : ஜன 31, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 203 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், கலெக்டர் அலுவலகம் எதிரே ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் நடந்தது. மறியலுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மகாலிங்கம், அண்ணாதுரை, அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் பொன் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரஹீம், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு தொகையை வழங்குதல், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 11.30 மணியளவில் சாலைமறியல் நடந்தது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 203 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.






      Dinamalar
      Follow us