sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்பு

/

உடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்பு

உடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்பு

உடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்பு


ADDED : பிப் 24, 2024 06:08 AM

Google News

ADDED : பிப் 24, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தகராறில் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியைச் சேர்ந்தவர் கம்ருதீன், 52 நேற்று முன்தினம் மணம்பூண்டி சுடுகாட்டு எரிமேடை அருகே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், குலதீபமங்கலத்தில் அடக்கம் செய்வதற்காக உடலை எடுத்துச் சென்றனர். அப்போது, தனி நபருக்கு சொந்தமான நிலத்தின் வழியே செல்லக்கூடாது என சிலர் கூறியதால், உடலை மாலை 5:30 மணிக்கு மணலுார்பேட்டை - திருக்கோவிலுார் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மணலுார்பேட்டை போலீசார் மற்றும் திருக்கோவிலுார் தாசில்தார் மாரியாப்பிள்ளை, நிலத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரவு 7:00 மணிக்கு உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us