/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 04, 2024 04:03 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார்.
தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜி முன்னிலை வகித்தனர். பொருளாளர் மணிவண்ணன், துணைத் தலைவர் ரவி, கல்லுாரி துணை முதல்வர் ஜான் விக்டர் வாழ்த்திப் பேசினர்.
கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக கல்லுாரி வளர்ச்சிக்குழு முதல்வர் கோதைநாயகி, முன்னாள் முதல்வர் கண்ணப்பன், நான் முதல்வன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்ட ஒங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முகாமில் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனத்தின் காலி பணியிடத்தின் தகுதிக்கேற்ப பணியாளர்களை தேர்வு செய்தனர்.
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். 950க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லுாரியின் கணினி துறைத் தலைவர் சக்திவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நான் முதல்வன் திட்ட கள்ளக்குறிச்சி ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.