sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மானியத்துடன் வேம்பு நடவு: விவசாயிகளுக்கு அழைப்பு

/

மானியத்துடன் வேம்பு நடவு: விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்துடன் வேம்பு நடவு: விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்துடன் வேம்பு நடவு: விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : செப் 20, 2024 08:26 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் வேம்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:

வேம்பின் இலை, பூ, எண்ணெய் மற்றும் புண்ணாக்கு போன்ற அனைத்து பொருட்களும் அங்கக வேளாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் அடியுரமாக பயன்படுத்தப்படுகிறது.

மண் அரிமானத்தைத் தடுப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகைய மகத்தான பயன்களைக் கொண்ட வேம்பு மரத்தினை விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் நடவு செய்ய எக்டருக்கு 17 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தினை இம்மாவட்டத்தில் செயல்படுத்திட மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன், 10 எக்டருக்கு 1.70 லட்சம் ரூபாய் ஆண்டு இலக்கு பெறப்பட்டுள்ளது.

ஊடுபயிர் மற்றும் பராமரிப்பு செய்வதற்கு 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, வேம்பு நடவு செய்வதற்கு ஆர்வம் உள்ள விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், திட்டம் சார்ந்த தகவலுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us