/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு
/
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு
ADDED : ஜன 17, 2025 11:18 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 14, 16 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு இன்று(18 ம் தேதி) நடக்கின்றது.
கள்ளக்குறிச்சி, இந்திலி, டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லுாரி கிரிக்கெட் வலை பயிற்சி மைதானத்தில் 14,16 வயதுக்குட்பட்டோருக்கு மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்களுக்கான தேர்வு இன்று( 18ஆம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது.
14 வயதுக்குட்பட்டோருக்கு காலை 9:30 மணிக்கும், 16 வயதுக்குட்பட்டோருக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகள்நடத்தப்படுகிறது. 14 வயதுக்குட்பட்டோர், 2011-ம் ஆண்டு செப்.1-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். 16 வயதுக்குட்பட்டோர் 2009-ம் ஆண்டு செப்.1-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். வயது தகுதியுடன், தேர்வில் பங்குபெறும் வீரர்கள் ஆதார் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 99440 00946 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.