sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு

/

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஆக 12, 2025 02:03 AM

Google News

ADDED : ஆக 12, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

சென்னையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். எனது குடும்பத்தினர், நண்பர்களை போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன் உள்ளிட்ட கருத்துக்களை கொண்ட உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.

நிகழ்ச்சியில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், கலால் உதவி ஆணையர் செந்தில்குமார், சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us