ADDED : ஏப் 24, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே, பிளஸ் 1 மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ஸ்ரீராம், 16; எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 1:30 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலவனாசூர்கோட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

