sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சுகாதாரத்துறை இயக்குநரை கண்டித்து பா.ம.க., சார்பில் முற்றுகை போராட்டம்

/

சுகாதாரத்துறை இயக்குநரை கண்டித்து பா.ம.க., சார்பில் முற்றுகை போராட்டம்

சுகாதாரத்துறை இயக்குநரை கண்டித்து பா.ம.க., சார்பில் முற்றுகை போராட்டம்

சுகாதாரத்துறை இயக்குநரை கண்டித்து பா.ம.க., சார்பில் முற்றுகை போராட்டம்


ADDED : ஜூலை 19, 2025 02:50 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களை பரிசோதித்து, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் சென்டர்கள் அதிகரித்து உள்ளது. உரிய கல்வி தகுதியின்றி பலர் ஸ்கேன் சென்டர்களை நடத்தி வருவதை தடுக்க தவறிய மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாலினியை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேல், மாநில மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் ராஜா பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பா.ம.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் இளையராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் பாலமுருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் முத்துவேல், கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன், நகர செயலாளர் சீனுவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us