/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்சோ வழக்கு வாலிபர் தற்கொலைக்கு முயற்சி
/
போக்சோ வழக்கு வாலிபர் தற்கொலைக்கு முயற்சி
ADDED : ஜன 09, 2025 12:27 AM
உளுந்துார்பேட்டை,; போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த புதுப் பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை ,30; பொறியியல் பட்டதாரியான இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் கடந்த 6ம் தேதி திருமலை மீது போக்சோ வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
போலீசாருக்கு பயந்து திருமலை நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் உளுந்துார்பேட்டையில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் அவரைக் காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.