/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நில தகராறில் இரு தரப்பு மோதல் 7 பேர் மீது போலீஸ் வழக்கு
/
நில தகராறில் இரு தரப்பு மோதல் 7 பேர் மீது போலீஸ் வழக்கு
நில தகராறில் இரு தரப்பு மோதல் 7 பேர் மீது போலீஸ் வழக்கு
நில தகராறில் இரு தரப்பு மோதல் 7 பேர் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஜூலை 28, 2025 02:16 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே நில தகராறு தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த மேலதாழனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 70; இவரது மகன் வெங்கடேசன், 34; இருவருக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நிலத்தகராறு காரணமாக, ஏழுமலை மற்றும் அவரது மனைவி விஜயா, 62; மகன் விக்னேஷ், 30; உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி பானுப்பிரியா, 31; இருவ ரையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இந்த மோதலில் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி பானுப்பிரியா இருவரும், ஏழுமலையை தாக்கினர்.
இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.