/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரியில் வாலிபர் சடலம் போலீஸ் விசாரணை
/
ஏரியில் வாலிபர் சடலம் போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 23, 2025 05:52 AM
திருக்கோவிலுார் :  திருக்கோவிலுார் ஏரிக்கரையில் மர்ம முறையில் இறந்த கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த தேவியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ஹரி, 29; சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அனு, 28; இவர்களுக்கு, 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை ஹரி, வீட்டில் இருந்து  தனது பைக்கில் வெளியில் புறப்பட்டார்.  இரவு வெகு நேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  இந்நிலையில் நேற்று காலை அவர் திருக்கோவிலுார், பெரிய ஏரியில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கோவிலூர் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

