ADDED : டிச 09, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : காட்டனந்தல் கிராமத்தில் காணாமல் போன பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி விஜயா, 48; இவரது கணவர் இறந்த நிலையில் தனது மகள் மற்றும் மகனுடன் காட்டனந்தல் கிராமத்தில் வசித்து வந்தார்.
கடந்த 4ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற விஜயா, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.