ADDED : ஆக 12, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான பட்டதாரி பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுபிள்ளை மகள் ரோஜா, 25; பி.ஏ., பி.எட்., பட்டதாரி. கடந்த 6ம் தேதி வெளியில் சென்ற ரோஜா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகள் ரோஜாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை அழகுபிள்ளை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.