/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு புகுந்து திருட்டு போலீஸ் விசாரணை
/
வீடு புகுந்து திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : பிப் 04, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே வீடு புகுந்து திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த விளக்கூர் புது காலனியைச் சேர்ந்த அருணாச்சலம், 53; பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 15ம் தேதி வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு பெங்களூரு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த மூன்றரை சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.