/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாக்கில் ஆண் உடல் போலீஸ் விசாரணை
/
துாக்கில் ஆண் உடல் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 02, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலை பகுதியில் துாக்கில் இறந்து கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை அருகே உள்ள கல்வராயன் மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் துாக்கில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று, துாக்கில் தொங்கிய உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.