ADDED : ஆக 26, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மாயமான வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த பழையனுார் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரகாஷ், 29; இவர் கடந்த ஜூலை 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான பிரகாசை தேடி வருகின்றனர்.