sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எரிந்த நிலையில் பெண் உடல் கணவரை தேடும் போலீசார்

/

எரிந்த நிலையில் பெண் உடல் கணவரை தேடும் போலீசார்

எரிந்த நிலையில் பெண் உடல் கணவரை தேடும் போலீசார்

எரிந்த நிலையில் பெண் உடல் கணவரை தேடும் போலீசார்


ADDED : செப் 23, 2024 02:26 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் கிராமத்தில், வடிவேல் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில், எரிந்த நிலையில் பெண் உடல் மிதப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிணற்றில் மிதந்த பெண் உடலை மீட்டு விசாரித்தனர்.

அதில், இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மனைவி சுதா, 28, என்பது தெரிய வந்தது. கார்த்திக் லாரி டிரைவர். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில், தம்பதியருக்கு பிரதீஷ், 6, நிகிதா, 4, என்ற குழந்தைகள் உள்ளனர்.

உடல் கிடந்த கிணற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த கார்த்திக் வீட்டை போலீசார் சோதனையிட சென்றனர். கதவை திறந்தபோது இரு குழந்தைகளும் துாங்கிக் கொண்டிருந்தனர். வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. மாடியில் சுதாவின் ஆடைகள் எரிந்த நிலையில் கிடந்தன. கார்த்திக் வீட்டில் இல்லை. சுதா உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us