நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: போக்குவரத்து விதிகளை மீறிய 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர்கள் லோகேஸ்வரன்,தனசேகரன் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, குடிபோதையில் ஓட்டியது சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது என 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.