ADDED : ஏப் 14, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், ; காவலர் குடியிருப்பில் பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிபவர் அசோக்குமார்,35; இவர், கடந்த 12ம் தேதி இரவு தனது பைக்கை சந்தைப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி விட்டு பணி நிமித்தமாக கள்ளக்குறிச்சி சென்றார்.
மறுநாள் காலை 8:00 மணிக்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணாதது அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.