/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜூன் 25, 2025 08:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி மூலவர் சுயம்பு லிங்கம் மற்றும் கொடி கம்பத்திற்கு அருகே உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், தேன் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து நந்தி பகவான் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.