/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன் விரோத தகராறு: தந்தை, மகன் கைது
/
முன் விரோத தகராறு: தந்தை, மகன் கைது
ADDED : நவ 03, 2024 11:20 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே முன் விரோத தகராறில் வாலிபர்களைத் தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முத்துபாண்டியன். இவருக்கும் எதிர்வீட்டைச் சேர்ந்த அழகேசன், 50; என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில், அழகேசன் அவரது மகன் ஆனந்தராஜ், 23; சேர்ந்து முத்து பாண்டியன், தங்கதுரை, சூர்யா, துரை, ரமேஷ், ஆனந்த பாபு ஆகியோரை தாக்கினர்.
காயமடைந்த முத்துபாண்டியன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அழகேசன், 50; அவரது மகன் ஆனந்தராஜ், 23; ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.