sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருவள்ளுவர் தினத்தில் இயங்கிய தனியார் பாருக்கு 'சீல்'

/

திருவள்ளுவர் தினத்தில் இயங்கிய தனியார் பாருக்கு 'சீல்'

திருவள்ளுவர் தினத்தில் இயங்கிய தனியார் பாருக்கு 'சீல்'

திருவள்ளுவர் தினத்தில் இயங்கிய தனியார் பாருக்கு 'சீல்'


ADDED : ஜன 21, 2025 07:32 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் கடந்த 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி மூட கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.

அதை மீறி கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள தனியார் 'பார்' செயல்படுவதாக புகார் எழுந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நடத்திய சோதனையில், பொரசக்குறிச்சி சின்னமணி,40; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.

இதையடுத்து சின்னமணி மற்றும் 'பார்' உரிமையாளர் அண்ணா நகர் முத்துசாமி மகன் வீரமணி ஆகியோர் மீது வழக்கு பதிந்து, சின்னமணியை கைது செய்தனர். 22 மதுபாட்டில்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அரசு உத்தரவை மீறி, இயங்கிய தனியார் பாரை கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் தலைமையில் ஊழியர்கள் நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி, கலால் ஆய்வாளர் குப்புசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us