நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பான தேர்ச்சி சதவீதம், விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பரிசு வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பாபு கென்னடி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் புனிதா வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் ரவி முன்னிலை வகித்தார். முன்னாள் ஆளுநர்கள் அன்பழகன், திலீப், சுவாசமத், தலைவர் வசந்தகுமார். முன்னாள் தலைவர் தெய்வீகன், வெங்கடாஜலபதி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினர். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சுப்ரமணியன், அருள், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.

