/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு : 9 பேர் மீது வழக்கு
/
அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு : 9 பேர் மீது வழக்கு
அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு : 9 பேர் மீது வழக்கு
அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு : 9 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 05, 2025 06:50 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சொத்து தொடர்பாக அண்ணன், தம்பிக்குள் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரைச் சேர்ந்தவர் அன்பழகன்,58; இவரது தம்பி ராஜேந்திரன்,50; இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக 2 மாதமாக பிரச்சனை இருந்துள்ளது.
கடந்த 3 ம் தேதி காலை 8.30 மணியளவில் இரு குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன், அவரது மகன் விக்னேஷ்,24; அலமேலு, தவமணி, விஜயலட்சுமி மீதும், மற்றொரு தரப்பில் அன்பழகன், கோபிநாத், பிரேம்நாத், மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விக்னேைஷ கைது செய்தனர்.