/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்கல்
/
மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்கல்
ADDED : ஜன 02, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டது.
நேற்று 6,7 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் ராமசாமி, முனுசாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.