/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி முன்பு வேகத்தடை பொதுமக்கள் கோரிக்கை
/
அரசு பள்ளி முன்பு வேகத்தடை பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2025 11:07 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இச்சாலையில் கலெக்டர், டி.எஸ்.பி. மார்க்கெட் கமிட்டி, அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. இச்சாலை வழியாக நாள்தோறும் பஸ், லாரி, கரும்பு லோடு ஏற்றி வரும் டிராக்டர்கள், பைக்குள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
இச்சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், சில நேரங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். மாணவர்கள் சாலையை கடக்கும்போது விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி அரசு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.