ADDED : ஜூலை 30, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள், தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் குறித்த குறைகேட்பு கூட்டம் எஸ்.பி., மாதவன் தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்களிடமிருந்து 50 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் திருமால், சரவணன், டி.எஸ்.பி., க்கள் தங்கவேல், குகன், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.